+91 44 28116770
+91 9710421880, 7299921880


  - அக்டோபர் மாத இதழ் தரவிறக்க (8495k .pdf)
- செப்டம்பர் மாத இதழ் தரவிறக்க (25,476k .pdf)
- ஆகஸ்ட் மாத இதழ் தரவிறக்க (9,075k .pdf)

"திருவருள் சக்தி" ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவ மாத இதழ், விய வருடம் 2006இல் தொடங்கப்பட்டு மே 2006 முதல் இதழாக வெளி வந்து இப்போது 10ஆம் ஆண்டில் பவனி வருகிறது. மணி, மந்திரம், ஒளசதம் எனும் சித்தர்களின் முப்பெரும் கலைகளையும் தன்னகத்தே தாங்கி வெளி வந்துக் கொண்டு வாசர்களின் சிறப்பான வரவேற்புடன் சீர்நடை போட்டு பவனி வருகிறது.

ஆன்மிகம்: மனிதனை மாமனிதனாக்கி பூமியில் வாழும் தகுதியைப் பெற்றிடும் புனிதனாக்கி உயர்ந்தவனாக்கி உயர்த்திக் காட்டுவது ஆன்மிகம். மனிதனிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை போக்குவது ஆன்மிகம். இருளை நீக்கி ஒளியை ஏற்றி நல்ல வழிகளைக் காட்டி உழைக்க வைக்க தன்னம்பிக்கை ஊட்டுவது ஆன்மிகம். இறைவன் மனித உயிருக்குத் தந்த, விலை மதிக்க முடியாத வரப்பிரசாதம் ஆன்மிகம். மனிதனை உயர வைத்து உய்விக்கும் ஞான ஒளி ஆன்மிகம். மனிதனின் மன அழுக்கைப் போக்கி மன நிம்மதி தருவது ஆன்மிகம்.

ஜோதிடம்: ஒரு மனிதனை பலப்படுத்துவதும் பலவீனப்படுத்துவதும், அவன் பிறக்கும்போது ஏற்படும் கிரகப் பலன்களே. அதை வைத்தே அவன், அவனுடைய வாழ்க்கையின் நிலை, சந்திக்கப்போகும் பிரச்சனைகள் பாவ புண்ணிய பலாபலன்கள், பூர்வ புண்ணிய ஸ்தான அமைப்பு அவனுக்கு அமையும் மனைவி அதனால் அவனுக்கு ஏற்படப் போகும் ஏற்றம், இறக்கம், வாழ்க்கை அமைப்பு ஆகியவைகளை மிகத்துல்லியமாகக் கணக்கிட்டுப் பார்த்தால், அவை அத்தனையும் உண்மை என்பதை ஜோதிட சாஸ்திரத்தின் மூலம் அறிந்துக் கொள்ள முடியும் என்பது ஆணித்தரமான அசைக்க முடியாத உண்மை. ஜோதிட சாஸ்திரத்தின் உண்மையை உணரக்கூடிய நிகழ்வுகளை உணர்ந்துக் கொண்டோமேயானால் நம் வாழ்க்கையை சீரோடும் சிறப்போடும் அமைத்துக் கொண்டு வழி நடத்த உதவுவது ஜோதிடமாகவே இருக்கும்.

மருத்துவம்: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" இது உணர்ந்துக் கொண்டவர்கள் உணர்த்தும் உண்மை நிலை. வியாதி வருவதற்கு முன் தடுக்கும் தன்மை, வந்த பிறகு குணப்படுத்துவதற்கு முற்படும் சமயோஜித நடவடிக்கை இனி வராமல் பார்த்துக் கொள்ள நாம் வழிவகை காண்பது தான் மருத்துவத்தைப் பற்றி அறிந்துக் கொள்வதின் பலன். அவை ஆயுர்வேதம், சித்த வைத்தியம், யுனானி ஓமியோபதி, அலோபதி (ஆங்கில மருத்துவம்) போன்ற எந்த வகை மருத்துவமாக இருந்தாலும் அவை நம் நோயற்ற வாழ்வுக்கு துணை நிற்பதில் ஒன்றேயாகும்.

நம் அன்றாட வாழ்விற்கு அத்தியாவசியமாக இருக்கும் இந்த ஆன்மிகம், ஜோதிடம், மருத்துவம் ஆகிய முத்தான மூன்று பகுதிகளையும் தன்னகத்தே தாங்கி, அந்தந்தத் துறைகளில் சிறந்து விளங்கும், ஆன்றோர்களும், சான்றோர்களும், ஆன்மிகத்தின் ஆணிவேராக அமைந்த ஞானிகளின் கட்டுரைகளும் அவர்களின் அனுபவ உண்மைகளும் "திருவருள் சக்தி" இதழில் தொடர்ந்து இடம் பெற்று வாசர்களின் ஏகோபித்த பாராட்டுகளுடன் வலம் வந்துக் கொண்டு இருக்கிறது.

"திருவருள் சக்தி" இதழை தொடர்ந்து படித்து வந்தால் வாழ்வில் ஏற்றம் காண்பதற்கு ஏதுவாகும்.

"திருவருள் சக்தி" உங்கள் சங்கடங்களைத் தீர்த்து சக்தியின் பேரருள் கிடைத்திட வழி காட்டும், உங்கள் வாழ்க்கைக்கு மெருகூட்டும், உங்கள் உயர்வுக்கு உயிரூட்டும்.

"திருவருள்" பஞ்சாட்சரம், "சக்தி" மூன்று அட்சரம், மும்மலங்களைப் போக்கும். "திருவருள் சக்தி" அஷ்டாச்சரம். திருமால், திருச்சிற்றம்பலத்தான், சக்தி & மூவுலகையும் காக்கும் முப்பெரும் சக்திகள். மூன்றும் ஒன்றாய் இணைந்து முத்தமிழ் போற்றும் "திருவருள் சக்தி" ஆன்மிகம் தழைத்தோங்கும் ஆலவிருட்சம்.










  - அக்டோபர் மாத இதழ் தரவிறக்க (12,541k .pdf)
- செப்டம்பர் மாத இதழ் தரவிறக்க (32,439k .pdf)
- ஆகஸ்ட் மாத இதழ் தரவிறக்க (12,723k .pdf)

"குருவருள் ஜோதிடம்" ஜோதிடத் திறனாய்வு மாத இதழாக கடந்த மே 2009இல் தொடங்கப்பட்டு 7ஆம் ஆண்டில் பீடு நடை போட்டு முதல் தரமான ஜோதிட மாத இதழாக வலம் வந்து வாசர்களின் ஒருமித்த பாராட்டுக்களைப் பெற்று பவனி வந்துக் கொண்டு இருக்கிறது. இதில் முன்னணி எழுத்தாளர்கள் பலர் பங்கு பெற்று மனம் குளிர மணம் வீசுகிறது.

மனிதனை ஆனந்த நிலை கொண்டு பரமானந்த நிலைக்கு மனதை பகுத்தறிந்து வைப்பதற்கு ஜோதிடக்கலை துணைபுரிகிறது. அப்படிப்பட்ட கலை வாழ்வியலோடு ஒன்றி தாழ்வு நிலைக்குத் தள்ளப்படாமல் சீரான வாழ்வைத் திறம்பட தடம் மாறாமலும், தடம் புரளாமலும் தக்க நேரத்தில் தாங்கி நிற்க வைத்திடும் தூண்களாகத் துணை பு£¤வது ஜோதிடக்கலை. ஜோதிடக் கலையில் பல உட்பிரிவுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு ஜோதிடக் கலைக்கு புத்துயிர் புகுத்தி புகழ் சேர்க்க¤ன்றன. அவற்றில் சிலவற்றை மட்டும் கையாண்டு நடைமுறையில் செயல்பட குறுகிய வட்டத்திற்குள் பலரும் முயற்சி செய்துக் கொண்டு இருக்கின்றனர். கடல் போல் வி£¤ந்த உட் பிரிவுகளை கையில் எடுக்கத் தயங்குகின்றனர். கற்ற திறமையின் வட்டத்திற்குள்ளேயே காலம் தள்ள முயற்சிக்கின்றனர். அது நெடிய பயணத்திற்கு நீண்ட வழியைக் கொடுக்காது. தூய பல தொன்மையான உட்பிரிவுகளை இன்று மறந்தும் அதில் திறமையானவர்களும் புதிய ஆர்வலர்களும் குறைந்து கடுகாகி காற்றோடு கரைந்துப் போவது வருத்தமான நிலைதான். தொன்மையான பாரம்பரியமான பல உட்பிரிவு ஜோதிடக் கலைகள் காலப்போக்கில் காணாமல் போவதை உணர்ந்து அவைகளைத் தோண்டித் துருவி எடுத்து அகழ்வாராய்ச்சியில் அடியெடுத்து நிகழ்வராய்ச்சியில் நிலைப்படுத்த குருவருள் ஜோதிடம்" ஆர்ப்பரித்து எழுந்து போர்ப்பரணிப்பாடி புடம்போட்ட தங்கம் போல் புகழ் மாறாமல் திறனாய்வு தரத்தோடு பவனி வந்துக் கொண்டு இருக்கிறது. வாசகர்களையும் நேசக்கரம் நீட்டி அரிய நெடிய பயணத்திற்கு வாட்டமின்றி ஊக்கத்தோடு புறப்பட உத்வேகத்துடன் வேண்டுகிறோம். அதற்கு துணைபுரிவது "குருவருள் ஜோதிடம்".










  - மகிழ மலையா? மர்ம மலையா? - தரவிறக்க (1,050k .pdf)

"அப்ஸரா நாவல்" நாவல் உலகின் மணி மகுடம் மே 2014இல் தொடங்கப்பட்டது. இது மாதந்தோறும் சிறந்த நாவல் படைப்பாளிகளைக் கொண்டு வெளிவந்துக் கொண்டிருக்கிறது. சிறப்பான கதைகளைக் கொண்டு வாழ்வு நிலைக்கு நல்ல வழி காட்டும் கலை நுணுக்கம் கொண்டு சிறப்பு பெற்றுள்ளது. மனிதன் அன்றாடம் கஷ்டப்பட்டு உழைத்து, அல்லல்பட்டு, அவதியுற்று, ஆற்றொனா துயரத்தோடு, ஆனந்த வாழ்வுக்கு ஏங்கித் தவிக்கும் மனித குலத்திற்கு இன்பத்தோடு இயங்குவதற்கு "அப்ஸரா நாவல்" அடிகோலுகிறது. சிறந்த கதை அம்சத்தோடு, கற்பனை வளத்தை கூட்டி, மன மகிழ்ச்சிக்கு வர்ணணைகளை இணைத்து படைக்கும் அரிய கதைகளை படித்து ஆனந்த வாழ்வு பெறும் மனதை ஒருநிலைப்படுத்த உதவி புரிகிறது. "அப்ஸரா நாவல்" மனித குலத்திற்கு பொழுதுபோக்கு அம்சமாக துணைபுரிந்து மனதை ஒருநிலைப்படுத்தி ஒழுங்குற வாழ்வை வகுத்துக் கொள்ள வழி காட்டுகிறது.

Home  |   About Us  |   Monthly Magazines  |   Special Magazines  |   Books  |   Photo Gallery  |   Contact [Site by maduraidirectory.com]